திரையுலகம்,முதன்மை செய்திகள் ராவணன் கொடுத்த அதிர்ச்சியில் விக்ரமின் வில்லங்க முடிவுகள்….

ராவணன் கொடுத்த அதிர்ச்சியில் விக்ரமின் வில்லங்க முடிவுகள்….

Tamil,Tamil News,Tamil News paper,Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily,newspaper,Tamilnadupolitics,kollywood,Tamil Cinema

கூலாக சிங்கப்பூர் போயிருந்தாரல்லவா விக்ரம்? அதற்கு பின்னால் இன்னொரு காரணமும் ஒளிந்திருக்கிறதாம். இது ஜாலி ட்ரிப் மட்டுமல்ல, ஒரு தயாரிப்பாளருக்கு தண்ணி காட்டும் ட்ரிப்பும் கூடவாம்.

மதராசப்பட்டினம் விஜய் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் படம் பாதி கிணற்றை தாண்டிவிட்டது. இதற்கு முன்பு விக்ரமின் துக்ளக் முடிவுகளால் மூன்று இயக்குனர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டு படப்பிடிப்பும் நடத்தப்பட்டது. பிறகு எடுத்தவரைக்கும் தேவையில்லை. டைரக்டரையே மாற்றுங்க என்று விக்ரம் முரண்டு பிடித்ததை ரசிகர்கள் அறிவர். முன் அனுபவம் இப்படியிருப்பதால் இந்த பாதிக்கிணறு பயணத்தை கூட பதிபக்தியோடு கவனித்துக் கொண்டிருக்கிறார் தயாரிப்பாளர். படம் துவங்குவதற்குள்ளாகவே பல லட்சங்களை விக்ரமால் இழந்த இவர், இப்போது அதைவிட பெரிய கிடுக்கிப்பிடியில் சிக்கிக் கொண்டிருக்கிறாராம்.

வேறென்ன? படப்பிடிப்புக்கு அடிக்கடி விக்ரம் மட்டம் போடுவதுதான் அந்த கிடுக்கிப்பிடி. பேசிய சம்பளத்தில் பாதிக்கு மேல் வாங்கிவிட்ட விக்ரம், மிச்ச சம்பளத்தையும் எண்ணி வைச்சதான் படப்பிடிப்புக்கு வருவேன் என்கிறாராம். பிசினஸ் ஆனதும் வாங்கிக்கலாம். முதல்ல நடிச்சு முடிச்சிருங்க என்கிறாராம் தயாரிப்பாளர்.

இந்த இழுபறிக்கு இடையேதான் சிங்கப்பூர் போயிருந்தார் விக்ரம். இப்ப புரியுதா பயணத்தின் நோக்கம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

Comments are closed.