திரையுலகம்,முதன்மை செய்திகள் மன்மதன் அம்புவில் சங்கீதா,சூர்யா இன்னும் யார் யாரோ…

மன்மதன் அம்புவில் சங்கீதா,சூர்யா இன்னும் யார் யாரோ…

Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper,Tamilnadu politics,kollywood,Tamil Cinema

சந்தோஷத்தில் இருக்கிறார் சங்கீதா. அவர் வில்லியாக நடித்த தம்பிக்கோட்டை விரைவில் திரைக்கு வருவது ஒருபுறம், கமலுடன் நடித்த மன்மதன் அம்பு இன்னொருபுறம்.கமல் சாருடன் நடிக்க வேண்டும் என்பது என்னுடைய பல நாள் கனவு. அது இந்தப் படத்தின் மூலம் பலித்திருக்கிறது என்றார் முகம் நிறைய பூ‌ரிப்புடன்.கமலுடன் நடிக்கும் போது பல டேக்குகள் வாங்கியிருக்கிறார் சங்கீதா. அப்போதெல்லாம் பதற்றப்படாதீங்க, ‌ரிலாக்ஸாக நடியுங்க என்று அவரை உற்சாகப்படுத்தியதே கமல்தானாம். இன்னும் பல நாட்களுக்கு சங்கீதாவின் சர்ப்ரைஸ் கமலுடன் சேர்ந்து நடித்ததாகதான் இருக்கும்.

மற்ற ஹீரோக்கள் நடிக்கும் படங்களில் சிறப்புத்தோற்றம் இருந்து அழைத்தால், ஈகோ பார்க்காமல் சூர்யா ஒப்புக் கொள்கிறார். ஒருநாள் ஷூட்டிங் என்றாலும் ஒத்துழைப்பு தருகிறாராம். ஏற்கனவே ஜோதிகாவுடன் ‘ஜூன் ஆர்’ படத்தில் ஒரு காட்சியில் நடித்த அவர், ரஜினியின் ‘குசேலன்’ படத்திலும் வந்தார். இப்போது கமல்ஹாசனின் ‘மன்மதன் அம்பு’, ஜீவா நடிக்கும் ‘கோ’, பாலா இயக்கத்தில் ஆர்யா, விஷாலுடன் ‘அவன் இவன்’ ஆகிய படங்களிலும் சிறப்புத்தோற்றத்தில் நடித்துள்ளார். ‘இது, என் நண்பர்களுக்காக நான் தரும் ஒத்துழைப்பு’ என்கிறார் சூர்யா

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி