திரையுலகம் எந்திரன்… ஏன் ஐஸ்வர்யா ராய்…

எந்திரன்… ஏன் ஐஸ்வர்யா ராய்…

enthiran_16

1973 – நவம்பர் 1’ இதுதான் இந்தியாவின் உலக அழகி ஐஸ்வர்யாராய் பிறந்த நாள். 1994 ஆம் ஆண்டு உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார் ஐஸ். அவருக்கு பின் இந்தியாவிலிருந்தும், உலகின் மற்ற நாடுகளிலிருந்தும் எந்தனையோ உலக அழகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

ஆனால், அன்றிலிருந்து இன்று வரை ஒப்பற்ற ஓரழகியாக திகழ்பவர் யாரென்றால்… அது ஐஸ்வர்யா ராய்தான் எனலாம்.

எந்திரன் படத்தில் நடிக்க ஐஸ்வர்யாராயை தேர்ந்தெடுத்தது பற்றி ஷங்கர் குறிப்பிடும் போது, “ஒரு எந்திரமே காதல் வயப்படும் அளவிற்கு பேரழகுப் பெண் தேவைப்பட்டார்.

அதற்கு தகுதியானவராக இருந்தவர் ஐஸ்வர்யாராய் மட்டும்தான்,” என்றார். ஷங்கர் கூறியது போலவே எந்திரனில் கொள்ளை அழகுடன்தான் இருக்கிறார் ஆளுயுர செர்ரி ஐஸ்.

இப்போது எதற்கு இந்த ஐஸுக்கே ஐஸ் வைக்கும் வேலை…? எல்லாம் பாலிவுட்டில் உருவாகப்போகும் ஐஸ்வர்யாராயின் வாழ்க்கையை கதையாக கூறும் படத்திற்காகதான்.

ஐஸ்வர்யாராயின் சிறுவயது முதல் உலக அழகி பட்டத்தை வெல்வது வரையிலான வாழ்க்கையை பாலிவுட்டில் படமாக எடுக்கவுள்ளனர். ஐஸ்வர்யா ராய் வேடத்தில் நடிக்கவிருப்பவர் பாலிவுட்டின் கவர்ச்சி நடிகை மினிஷா லம்பா.

ஐஸ்வர்யா ராய் வேடத்தில் நடிக்க மினிஷா லம்பாவை அணுகியுள்ளனர். கதையைக் கேட்டதும் உடனடியாக ஒப்புக்கொண்டாராம் மினிஷா.

“எனது ரோல் மாடலே ஐஸ்வர்யா ராய்தான். அவரின் வேடத்தில் நடிக்க கொடுத்து வைத்திருக்கவேண்டும்,” என்றாராம் மினிஷா லம்பா.

விரைவில் படத்தின் ஷூட்டிங் தொடங்கப்படவுள்ளதாக வடக்கிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி