செய்திகள்,பரபரப்பு செய்திகள் “வீட்டில் கழிவறை இல்லை” – பிரிந்து சென்ற மனைவி: கணவர் தற்கொலை

“வீட்டில் கழிவறை இல்லை” – பிரிந்து சென்ற மனைவி: கணவர் தற்கொலை

“வீட்டில் கழிவறை இல்லை” – பிரிந்து சென்ற  மனைவி:  கணவர் தற்கொலை post thumbnail image
வீட்டில் கழிவறை இல்லாதலால் காதல் மனைவி தன் தாய்விட்ற்கு பிரிந்து சென்றார்.இதனால் கணவர் தற்கொலை செய்துகொண்டார்.

சேலம் மாவட்டத்தினை சேர்ந்தவர் செல்லதுரை .இவரும் ,தீபா என்பவரும் கடந்த திங்கட்கிழமை திருமணம் செய்துள்ளனர் .பின்னர் செல்லத்துரை வீட்டிற்கு சென்றுள்ளனர்.அங்கு கழிவறை இல்லை என்று தெரிந்த தீபா வேதனையடைந்துள்ளார் .உடனே தனது தாய் வீட்டிற்கு கிளப்பி சென்றுள்ளார்.தீபாவை சமாதனம் செய்து தோற்றுப்போன செல்லத்துரை கடந்த புதன்கிழமை அன்று தற்கொலை செய்துகொண்டார் .

இதுகுறித்து அரசு அதிகாரிகள் கூறுகையில் “மக்களுக்கு அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தரப்படுகிறது.தனிநபர் கழிவறை அமைக்க மானியமும் வழங்கப்படுகிறது .ஆனால் மக்கள் அதெல்லாம் கண்டுகொள்வதில்லை “என்று தெரிவித்தனர் .இந்த தற்கொலை சம்பவம் கிராம மக்களிடையே அதிர்ச்சியும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது .

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி