செய்திகள்,பரபரப்பு செய்திகள் பள்ளி மாணவனை கடத்திய ஆசிரியை : சென்னையில் கைது !!

பள்ளி மாணவனை கடத்திய ஆசிரியை : சென்னையில் கைது !!

பள்ளி மாணவனை கடத்திய ஆசிரியை : சென்னையில்  கைது !! post thumbnail image
பள்ளி மாணவனை கடத்திக்கொண்டு சென்னை வந்து வாழ்ந்த கேரள ஆசிரியை கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் ஆலப்புழாவைச் சேர்ந்தவர் டியோரனா தம்பி (வயது 40). சி.பி.எஸ்.இ. பள்ளி ஒன்றில் ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறார்.அங்கு பத்தாம் வகுப்பு மாணவன் ஒருவனுடன் இவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.அந்த தொடர்பு நாட்கள் செல்ல செல்ல தகாத உறவாக மாறியுள்ளது .கடந்த 23ஆம் தேதி யாருக்கும் தெரியாமல் சென்னைக்கு மாணவனை அழைத்து வந்துள்ளார்.மாணவனை காணவில்லை என அவனது பெற்றோர் கேரளா போலீஸிடம் புகாரளித்தனர்.அதன்படி ஆசிரியை செல்போனை டிரேஸ் செய்ததில் அவர் சென்னை சூளைமேட்டில் இருப்பதாக தெரியவந்தது.

சென்னை வந்த கேரள போலீசார் ,சூளைமேடு போலீஸ் உதவியுடன் விடுதி ஒன்றில் தங்கியிருந்த ஆசிரியயை பிடித்தனர்.மாணவனையும் மீட்டனர்.ஆசிரியை கணவரை பிரிந்து வாழ்பவர் என்பது குறிப்பிடத்தக்கது .தன்னிடம் படிக்கும் மாணவன் ஒருவனை தன் ஆசைக்காக ஆசிரியை கடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

Tags: