செய்திகள் பெற்ற தாயை 7 ஆண்டுகளாக கற்பழித்த போதை காமுகன்!…

பெற்ற தாயை 7 ஆண்டுகளாக கற்பழித்த போதை காமுகன்!…

பெற்ற தாயை 7 ஆண்டுகளாக  கற்பழித்த போதை காமுகன்!… post thumbnail image
நியூயார்க்:-மத்திய அமெரிக்காவில் உள்ள ஹோன்டுராஸ் குடியரசில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவன் பேபியன் ஆல்வராடோ(38). கொடிய போதைப் பழக்கங்களுக்கு அடிமையாகிவிட்ட இவன் ஒருநாள் முழு போதையில் இருந்தபோது தன்னைப் பெற்ற தாய் என்றும் பாராமல் தற்போது சுமார் 60 வயதாகும் அந்தப் பெண்மணியை பாலியல் பலாத்காரம் செய்து கற்பழித்து விட்டான்.

பின்னர், கடந்த 7 ஆண்டுகளாக போதை தலைக்கேறும் வேளைகளில் எல்லாம் இதையே வாடிக்கையாக்கிக் கொண்டான். குடும்ப கவுரவம் கருதி இதை மூடி மறைத்துவந்த அந்தத் தாய், நேற்றிரவு இவனது அத்துமீறல் எல்லை கடந்து போனதால் உள்ளூர் போலீசாரிடம் புகார் அளித்தார்.இதனையடுத்து, அந்த காம வெறியனை கைது செய்த போலீசார் அவனை காவலில் அடைத்து விசாரித்து வருகின்றனர். கடந்த இரண்டு மாதங்களில் ஹோன்டுராஸ் குடியரசில் நடைபெற்ற இரண்டாவது ஒழுக்கக்கேடான சம்பவம் இது என உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இரண்டு மாதங்களுக்கு முன்னர் இதேபோல் பெற்ற அன்னை என்றும் பாராமல் 51 பெண்ணை கற்பழித்த 21 வயது காமுகனை போலீசார் கைது செய்திருந்ததாக அந்த ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி