செய்திகள் ஓரினச்சேர்கை கணவனின் கொடுமையால் தற்கொலை: பெண் மருத்துவர் உருக்கமான கடிதம்!…

ஓரினச்சேர்கை கணவனின் கொடுமையால் தற்கொலை: பெண் மருத்துவர் உருக்கமான கடிதம்!…

ஓரினச்சேர்கை கணவனின் கொடுமையால் தற்கொலை: பெண் மருத்துவர் உருக்கமான கடிதம்!… post thumbnail image
புதுடெல்லி:-டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பணியாற்றிய பெண் டாக்டர் நேற்று அங்குள்ள ஓட்டல் ஒன்றில் தனது கையின் மணிக்கட்டை அறுத்துக்கொண்டு தற்கொலை செய்துகொண்டார். தனது தற்கொலைக்கு ஓரினச்சேர்க்கையாளரான தனது கணவர் தான் காரணம் என்று கடிதம் எழுதியுள்ளார். 31 வயதாகும் பிரியா வேத என்ற அந்த பெண் மருத்துவர் எழுதியுள்ள நான்கு பக்க கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது;

ஓரினச்சேர்கையாளரான எனது கணவர், என்னை வரதட்சனை கேட்டு கொடுமைப்படுத்தினார். ஐந்து வருடங்களுக்கு முன் திருமணம் ஆனபோதும் எங்கள் இருவருக்கும் இடையில் எவ்வித உடல் ரீதியான தொடர்பும் ஏற்படவில்லை. திருமணம் ஆனதற்கு பின், எனது கணவர் தனது லேப்டாப் மூலம் போலி ஜி-மெயில் முகவரியை பயன்படுத்தி ஓரினச்சேர்க்கை நண்பர்களுடன் சாட்டிங் செய்துள்ளதை கண்டேன். இது தெரிந்ததும், மனைவி என்ற முறையில் அவருக்கு உதவ நான் முடிவு செய்தேன். ஆனால் நாளாக நாளாக என்னை அவர் மனரீதியாக கொடுமைப்படுத்த ஆரம்பித்தார். ஆகவே என்னால் அவருடன் சேர்ந்து வாழமுடியாது என்று எழுதிவைத்துள்ளதுடன், நீங்கள் மனிதப்பிறவியே அல்ல. எனது வாழ்க்கை கெடுத்த நீங்கள் ஒரு சாத்தான் என்று குறிப்பிட்டுள்ளார். இதை தொடர்ந்து மருத்துவரான பிரியாவின் கணவரும் கைது செய்யப்பட்டார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி