எனவே, நேரில் சந்திக்காமல் டெலிபோனில் பேசி வந்தனர். இதற்கிடையே, விக்டர் சேனா தனது வீட்டை காலி செய்துவிட்டு ஸ்கோ சென்று விட்டார். மேலும், அவர் எங்கு வேலை பார்க்கிறார் என்றும் தெரியவில்லை.எனவே, அவருக்கு ‘பேஸ்புக்’ இணையதளம் மூலம் சம்மன் அனுப்பும்படி சுப்ரீம் கோர்ட்டில் மனைவி பைடூ மனு செய்தார். அதை சுப்ரீம் கோர்ட்டு ஏற்றுக் கொண்டது.
அதன் மூலமே இருவரும் விவாகரத்து தொடர்பான தகவல்களை பரிமாறிக் கொண்டனர். அதை ஏற்றுக் கொண்ட நீதிபதி மாத்யூ கூப்பர் வழக்கு தொடர்ந்த லெனோரா பைடூவுக்கு விவாகரத்து வழங்கி தீர்ப்பளித்தார். இதன் மூலம் ‘பேஸ்புக்’ வழியாக விவாகரத்து பெற்ற முதல் அமெரிக்க பெண் என்ற பெருமையை லெனோரா பைடூ பெற்றுள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி