செய்திகள்,விளையாட்டு தோனி சொன்னால் யோசிக்காமல் 24-வது மாடியில் இருந்தும் குதிப்பேன் – இஷாந்த் சர்மா!…

தோனி சொன்னால் யோசிக்காமல் 24-வது மாடியில் இருந்தும் குதிப்பேன் – இஷாந்த் சர்மா!…

தோனி சொன்னால் யோசிக்காமல் 24-வது மாடியில் இருந்தும் குதிப்பேன் – இஷாந்த் சர்மா!… post thumbnail image
ஐதராபாத்:-இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனி சொன்னால் ஏதுவும் கேட்காமல் 24 மாடியில் இருந்து கூட குதிக்க தயார் என வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா தெரிவித்து உள்ளார்.ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு அளித்துள்ள நேர்காணலில் அவர் கூறியிருப்பது:- 2011-ம் ஆண்டு உலகக்கோப்பை அணியில் நான் தேர்ந்தெடுக்கப்படவில்லை. இப்போது நடந்து முடிந்த உலகப்கோப்பையில் விளையாட மிகுந்த விருப்பத்துடன் இருந்தேன்.

முழங்காலில் ஏற்பட்ட காயத்தால் விளையாட முடியாது என தெரியவந்த போது உடைந்து போய்விட்டேன். தற்போது இருக்கும் இந்திய அனியுடன் சேர்ந்து விளையாட வேண்டும் என மிகுந்த ஆர்வத்துடன் இருந்தேன். காயம் ஏற்படுவதை தடுக்கும் சக்தி என் கையில் இல்லை. அவர் (தோனி) மட்டும் இல்லாமல் இருந்தால் உலகக்கோப்பையில் விளையாட முடியாததால் ஏற்பட்ட வலியில் இருந்து மீண்டு வர மிகவும் சிரமப்பட்டிருப்பேன். தோனி மாதிரி ஒரு கேப்டன் சொன்னால், ஒரு வினாடி கூட யோசிக்காமல் 24-வது மாடியில் இருந்து கூட குதிப்பேன். இவ்வாறு இஷாந்த் கூறினார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி