செய்திகள்,திரையுலகம் மீண்டும் மதுரை பக்கம் வரும் நடிகர் விஜய்!…

மீண்டும் மதுரை பக்கம் வரும் நடிகர் விஜய்!…

மீண்டும் மதுரை பக்கம் வரும் நடிகர் விஜய்!… post thumbnail image
சென்னை:-நடிகர் விஜய் தற்போது நடித்து வரும் ‘புலி’ படத்தின் படப்பிடிப்பு அநேகமாக இந்த மாத இறுதிக்குள் முடிந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் பாடல் காட்சிகளை வெளிநாட்டில் படமாக்க உள்ளார்கள். அதன் பின் இறுதிக்கட்டப் பணிகளுக்காக சுமார் மூன்று மாதங்கள் எடுத்துக் கொண்டு ஆகஸ்ட்டில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளார்கள். இந்தப் படத்தை அடுத்து அட்லீ இயக்கத்தில் விஜய் நடிக்க உள்ளார். மே மாதம் முதல் இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகி பொங்கலுக்கு வெளியாகும் விதத்தில் தயாரிக்கப்படலாம் என்கிறார்கள்.

இந்தப் படத்தை அடுத்து சசிகுமார் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் உருவாக உள்ளது என்று கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சசிகுமார், விஜய்யை எப்போதோ சந்தித்து கதையைச் சொல்லி சம்மதம் வாங்கிவிட்டார். அந்தப் படத்தில் நடிக்க விஜய் மிகவும் ஆர்வமாக இருக்கிறார் என்று அப்போதே தகவல்கள் வெளியாகின. சசிகுமார் தற்போது தாரை தப்பட்டை படத்தைத் தயாரித்து பாலா இயக்கத்தில் நாயகனாவும் நடித்து வருகிறார்.

இந்தப் படத்தை முடித்து வெளியீட்டு வேலைகள் நிறைவடைவதற்கும், விஜய்யின் படத்தை ஆரம்பிப்பதற்கும் சரியாக இருக்கும் என்கிறார்கள். படத்தின் கதை கண்டிப்பாக மதுரைப் பின்னணியில்தான் இருக்கும் என்கிறார்கள். ஏனென்றால் சசிகுமார் மதுரைப் பின்னணியில் முதன் முறையாக இயக்கிய ‘சுப்பிரமணியபுரம்’ படம் மாபெரும் வெற்றி பெற்றதும், அந்த அளவுக்கு பவர்ஃபுல்லான ஒரு கதையைத்தான் விஜய் எதிர்பார்க்கிறார் என்றும் பேசிக் கொள்கிறார்கள்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி