அப்போது, வெளியே காத்திருந்த மந்திரியின் உதவியாளர், உடை மாற்றும் அறையை குறிவைத்தபடி ஒரு ரகசிய கேமரா பொருத்தப்பட்டிருப்பதை கண்டு திடுக்கிட்டார். உடனடியாக, மந்திரி ஸ்மிரிதி இராணிக்கு இது தொடர்பான தகவலை தெரிவித்து எச்சரித்தார். இதனையடுத்து, அறையினுள் இருந்து வெளியே வந்த ஸ்மிரிதி இராணி போலீசாருக்கு தகவல் அளித்தார்.
விரைந்து வந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்த கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளை ஆய்வு செய்தனர். பின்னர் அக்கடையில் பணிபுரிந்த ஊழியர்கள் 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்நிறுவனத்தின் முக்கிய தலைவர்களை நாளைய விசாரணைக்கு ஆஜராகுமாறு கோவா போலீஸ் சம்மன் அனுப்பியுள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி