செய்திகள்,முதன்மை செய்திகள்,விளையாட்டு இறுதிப்போட்டிக்கு பிறகு ஆஸி. கேப்டன் கிளார்க் ஓய்வு!…

இறுதிப்போட்டிக்கு பிறகு ஆஸி. கேப்டன் கிளார்க் ஓய்வு!…

இறுதிப்போட்டிக்கு பிறகு ஆஸி. கேப்டன் கிளார்க் ஓய்வு!… post thumbnail image
மெல்போர்ன்:-ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் மைகேல் கிளார்க் உலக கோப்பையின் இறுதி ஆட்டத்துடன் ஒரு நாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப்போவதாக தெரிவித்துள்ளார். மைகேல் கிளார்க் தொடர்ந்து காயத்தால் அவதிப்பட்டு வருகிறார். முதுகு வலியுடன் நீண்டநாள் விளையாடி வரும் அவர், இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின்போது காலில் காயம் ஏற்பட்டது.

இதனால் டெஸ்ட் தொடரில் இருந்து விலகிய அவர் அதன் பிறகு முத்தரப்பு ஒரு நாள் தொடரிலும் பங்கேற்கவில்லை. ஆகவே, உலகக்கோப்பை அணியில் இடம்பெறுவாரா? என்ற சந்தேகமும் எழுந்தது. ஆனால், அவர் உடல்தகுதியை நிரூபித்ததால் அணியில் சேர்க்கப்பட்டார்.

நீண்ட நாட்களாக ஆஸ்திரேலியா அணிக்காக விளையாடி வரும் கிளார்க் நாளை நடைபெறும் இறுதி ஆட்டம் பற்றி செய்தியாளர்களிடம் பேசியபோது ஓய்வு அறிவிப்பை தெரிவித்தார். இதனால் நாளைய போட்டி அவருக்கு உணர்ச்சிகரமான போட்டியாக இருக்கப்போகிறது. ஆஸ்திரேலியாவிற்கு உலகக்கோப்பையை பெற்று தந்த சந்தோசத்துடன் ஓய்வு பெறுவாரா… என்பது நாளை தெரியும்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி