புதுடெல்லி:-மத்திய மந்திரி மேனகா காந்தி அனைத்து மத்திய மந்திரிகளுக்கும் ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:– மத்திய மந்திரிகளின் அலுவலகங்கள் தற்போது பெரும்பாலும் பெனாயில் உள்ளிட்ட ரசாயன பொருள்கள் மூலம் சுத்தப்படுத்தப்படுகின்றன. அவை மிகவும் மோசமானவை. சுற்றுச்சூழலுக்கு உகந்தவை அல்ல.
அதற்கு பதிலாக பசுவின் கோமியம் (சிறுநீர்) தெளித்து அலுவலகங்களை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுங்கள். இது அலுவலகங்களை சுத்தப்படுத்துவதுடன் சுற்றுச்சூழலையும் பாதுகாக்கிறது. கிருமிகளை தாக்கி அழிப்பதில் பெனாயில் போன்ற ரசாயன அமிலங்களை விட பசுவின் கோமியம் மிகவும் சக்தி வாய்ந்தது.
எனவே தற்போது உங்கள் அலுவலகங்களில் பெனாயில் பயன்படுத்துவதை நிறுத்தி விட்டு அதற்கு பதிலாக பசு கோமியம் பயன்படுத்த அறிவுரை கூறுங்கள்.தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், புனித பசு பவுண்டேசன் போன்ற அமைப்புகளிடம் பசு கோமியம் கிடைக்கிறது. அவற்றை வாங்கி பயன்படுத்துங்கள்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி