புதுடெல்லி:-சிங்கப்பூர் முன்னாள் பிரதமர் லீ குவான் யூ மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், அரசியல் மேதையாகவும், சிங்கப்பூர் தலைவராகவும் திகழ்ந்த லீ குவான் யூ வாழ்க்கை அனைவருக்கும் விலை மதிப்புமிக்க பாடமாகும். அவரது மறைவு குறித்த செய்தி மிகவும் வருத்தத்தை அளிக்கிறது.
இந்த தருணத்தில் லீ குவான் யூ குடும்பத்தினருக்கும், சிங்கப்பூர் மக்களுக்கும் மன தைரியம் அளிக்க வேண்டும் என இறைவனை பிரார்த்தனை செய்கிறோம். அவரது ஆன்மா அமைதி அடையட்டும் என தெரிவித்துள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி