செய்திகள் எஜமானரின் தாயை கொன்று தின்ற நாய்!…

எஜமானரின் தாயை கொன்று தின்ற நாய்!…

எஜமானரின் தாயை கொன்று தின்ற நாய்!… post thumbnail image
ட்ரொபெடா டுர்னு செவெரின்:-ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த நாடுகளில் ஒன்றான ரோமானியாவின் ’ட்ரொபெடா டுர்னு செவெரின்’ பகுதி மக்கள் தங்கள் பக்கத்து வீட்டில் குடியிருக்கும் எமிலா மிட்ராய் வீட்டின் பின்புறம் உடலில் தலை மற்றும் வலது கை இல்லாத நிலையில் கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். அவருக்கு அருகே சங்கிலியால் கட்டப்பட்டிருந்த அவரது வளர்ப்பு நாய் எமிலாவின் சதைகளைக் கடித்துத்தின்றபடி இருந்தது.

உடனடியாக போலீசாருக்கு தகவல் அளித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் துப்பாக்கியின் மூலம் நாய்க்கு மயக்க மருந்தைச் செலுத்தி எமிலாவின் பிரேதத்தை மீட்டனர்.
விசாரணையின் போது எமிலாவின் 35 வயது மகன் ஸ்டீபன் மிட்ராய் வீட்டின் பாதுகாப்பிற்காக அந்த நாயை வளர்த்திருப்பது தெரிய வந்தது. இனக்கலப்பு செய்யப்பட்ட பிட்புல் வகையைச் சேர்ந்த அந்த நாய் மூர்க்கத்தனமான குணம் கொண்டது.

இதன் மூர்க்ககுணத்தை அறிந்த என் அம்மா எப்போதும் இந்த நாயை விட்டு விலகியேதான் இருப்பார். ஆனால் எப்படி இது நடந்ததென்று தெரியவில்லை என்று கதறி அழுகிறார் ஸ்டீபன்.
ஸ்டீபன் மீது நாயை கட்டுப்பாடில் வைக்காத குற்றத்திற்காக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி