செய்திகள் மாணவிகளுக்கு செல்போனில் ஆபாச படம் காட்டிய ஆசிரியர்!…

மாணவிகளுக்கு செல்போனில் ஆபாச படம் காட்டிய ஆசிரியர்!…

மாணவிகளுக்கு செல்போனில் ஆபாச படம் காட்டிய ஆசிரியர்!… post thumbnail image
மும்பை:-மும்பை அருகே உள்ள தனியார் பள்ளியில் மாணவிகளுக்கு ஆபாச படம் காட்டியதாக ஆசிரியர் கைது செய்யப்பட்டார். சில தினங்களுக்கு முன், வகுப்பில் ஆசிரியர் தங்களிடம் ஆபாச படம் காட்டுவதாக மாணவி ஒருவர் தன் தந்தையிடம் தெரிவித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த தந்தை உள்ளூர் அரசியல்வாதி ஒருவரை உதவிக்காக அணுகி, அவர் மூலமாக போலீசில் புகார் அளித்தார். அவர் அளித்த புகாரின் அடிப்படையில், 35 வயதான அந்த ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.

அவர் தன் வகுப்பில் படிக்கும் மாணவிகளிடம் செல்போனில் ஆபாச படத்தை காட்டியதாகவும் அதை பார்க்காதவர்களை தேர்வில் பெயிலாக்கி விடுவதாக மிரட்டியதாகவும் போலீசார் தெரிவித்தனர். ஐந்து வருடமாக அப்பள்ளியில் பணியாற்றி வந்த அந்த ஆசிரியரிடம் தற்போது காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி