செய்திகள்,முதன்மை செய்திகள் பெண் ஐ.எஸ். தீவிரவாதி சஜிதா அல்-ரிஷாவி உள்பட இருவரை தூக்கில் போட்டது ஜோர்டான்!…

பெண் ஐ.எஸ். தீவிரவாதி சஜிதா அல்-ரிஷாவி உள்பட இருவரை தூக்கில் போட்டது ஜோர்டான்!…

பெண் ஐ.எஸ். தீவிரவாதி சஜிதா அல்-ரிஷாவி உள்பட இருவரை தூக்கில் போட்டது ஜோர்டான்!… post thumbnail image
விமானி முயாத் அல்– கசாயெஸ்பேயை உயிருடன் எரித்து கொன்றதற்கு அதிரடியாக பழிவாங்குவோம் என ஜோர்டான் அரசு அறிவித்து இருந்தது. அதன்படி தங்கள் நாட்டின் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 2 ஐ.எஸ்.தீவிரவாதிகளை உடனடியாக தூக்கிலிட்டு கொன்றது.

இந்த தகவலை அரசின் செய்தி தொடர்பாளர் முகமது அல் – மொமாளி தெரிவித்தார். அவர்களில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட பெண் தீவிரவாதி சஜிதா அல் – ரிஷாவியும் ஒருவர். இவர் கடந்த 2005–ம் ஆண்டு அம்மானில் தற்கொலை தாக்குதல் நடத்தி 60 பேரை கொன்றவர்.

இவரை விடுவிக்க விமானியை ஈடாக ஐ.எஸ்.தீவிரவாதிகள் அறிவித்து இருந்தனர். இவரை தவிர தூக்கிலிடப்பட்டவர்களில் மற்றொரு தீவிரவாதி ஷியாத் அல் – கர்போலி ஆவார். விமானி கொலை வீடியோ வெளியான சில மணி நேரங்களில் இவர்கள் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி