பிணைக் கைதியாக பிடித்து வைத்த தீவிரவாதிகள், அவரை விடுவிக்கவேண்டுமானால் ஈராக்கிய பெண் தீவிரவாதி சஜிதா அல்–ரிஷாவியை விடுதலை செய்ய வேண்டும் என்று கெடு விதித்தனர். எனினும் விமானி அல்–கசாஸ்பெ உயிருடன் இருப்பதற்கான ஆதாரத்தை தரும்படி தீவிரவாதிகளிடம் ஜோர்டான் அரசு கேட்டது. விமானி உயிருடன் இருப்பதை உறுதி செய்தால் பெண் தீவிரவாதியை ஒப்படைப்பதாக ஜோர்டான் அரசு தெரிவித்தது. இதற்கிடையே ஜப்பான் பிணைக் கைதி கென்ஜி கோடோ சில தினங்களுக்கு முன் தலை துண்டித்து கொல்லப்பட்டார். ஆனால், விமானி அல்–கசாஸ்பே குறித்து எந்த விவரமும் வெளிவரவில்லை.
இந்நிலையில் விமானி அல்-காசாஸ்பேவை கூண்டில் அடைத்து பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்து கொன்றுள்ள வீடியோ காட்சி தற்போது வெளியாகியுள்ளது. ஆரஞ்சு நிற உடை அணிந்த அவர் தனக்கு என்ன நேரப்போகிறது என்று தெரியாமலேலே அந்த கூண்டை நோக்கி நடந்துவருகிறார். பின்னர் உடைகளில் பெட்ரோல் ஊற்றப்பட்ட நிலையில் கூண்டுக்குள் நிற்கும் அவர் தீ வைத்து எரிக்கப்படுகிறார். இவ்வாறு அவர் எரித்துக்கொல்லப்படும் புகைப்படங்களை பார்த்து, உலகம் முழுவதிலும் உள்ள மக்கள் மிகுந்த அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி