செய்திகள்,திரையுலகம் நடிகை ஜோதிகாவால் அவதிப்படும் சூர்யா!…

நடிகை ஜோதிகாவால் அவதிப்படும் சூர்யா!…

நடிகை ஜோதிகாவால் அவதிப்படும் சூர்யா!… post thumbnail image
சென்னை:-நடிகர் சூர்யாவை திருமணம் செய்துகொண்ட பின்னர் நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் சினிமாவில் நடிக்க வந்துள்ளார் ஜோதிகா. மலையாளம் படமான ‘ஹவ் ஓல்ட் ஆர் யூ’ என்ற படத்தின் தமிழ் ரீமேக்கில் நடித்து வருகிறார். சொந்த பட நிறுவனமான 2டி என்டர்டைன்மென்ட் சார்பில் இப்படம் தயாரிக்கப்பட்டு வருகின்றது.

இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு டில்லியில் நடந்து முடிந்த நிலையில் தற்போது இரண்டாவது கட்ட படப்பிடிப்பு ஆரம்பமாகி உள்ளது. கேரளாவில் நடைபெற்று வரும் இரண்டாவது கட்ட படப்பிடிப்பில் ஜோதிகா ஒவ்வொரு ஷாட்டுக்கும் அதிக நேரம் எடுத்துக்கொள்கிறாராம். இதனால் படத்தை குறித்த நேரத்திற்குள் முடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் நாட்கள் அதிகமானால் தயாரிப்பு செலவுகளும் அதிகமாகும் என்பதால் விஷயம் சூர்யாவிடம் சென்றுள்ளது.

இதனால் சூர்யா ஜோதிகாவை கூப்பிட்டு எச்சரிக்கை செய்துள்ளராம். ஒவ்வொரு ஷாட்டுக்கும் அதிக நேரம் எடுத்தால் பின்னர் தயாரிப்பு செலவு அதிகமாகும் என்று ஜோதிகாவுக்கு எடுத்துக்கூறி ஒவ்வொரு ஷாட்டுக்கும் தேவையான அளவு நேரத்தை மட்டும் எடுத்துக்கொள்ளுமாறு அட்வைஸ் செய்துள்ளாராம். ஆனாலும் ஜோதிகாவால் பழைய வேகத்தில் நடிக்க முடியவில்லையாம். இதனால் என்ன செய்வது எனத்தெரியாமல் கதறுகின்றாராம் சூர்யா.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி