செய்திகள்,தொழில்நுட்பம்,முதன்மை செய்திகள் ஸ்காட்லாந்தில் ரன்வேயை விட்டு விலகி தரையில் மோதிய விமானம்!…

ஸ்காட்லாந்தில் ரன்வேயை விட்டு விலகி தரையில் மோதிய விமானம்!…

ஸ்காட்லாந்தில் ரன்வேயை விட்டு விலகி தரையில் மோதிய விமானம்!… post thumbnail image
கிளாஸ்கோ:-ஸ்காட்லாந்தில் லெவிஸ் தீவின் ஸ்டோர்னோவே விமான நிலையத்தில் இருந்து கிளாஸ்கோ நகருக்கு 25 பயணிகள் மற்றும் 3 விமான ஊழியர்களுடன் விமானம் புறப்பட்டது. புறப்பட்டு அதிவேமாக ரன்வேயில் சென்ற விமானம், திடீரென கட்டுப்பாட்டை இழந்து திசைமாறி ரன்வேயை விட்டு விலகி தரையில் மோதியது.

விபத்து பற்றி தகவல் அறிந்ததும் தீயணைப்பு மற்றும் மீட்புக்குழுவினர் விரைந்து சென்று மீட்டு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் பலத்த காயமடைந்த 2 ஆண்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். 2 பெண்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது. பலத்த காற்று வீசியதால், விமானம் ரன்வேயைவிட்டு விலகியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி