செய்திகள்,திரையுலகம் விஜய் செய்த கலாட்டா, அஜித்தின் கடின உழைப்பு – மனம் திறந்த கே.எஸ்!…

விஜய் செய்த கலாட்டா, அஜித்தின் கடின உழைப்பு – மனம் திறந்த கே.எஸ்!…

விஜய் செய்த கலாட்டா, அஜித்தின் கடின உழைப்பு – மனம் திறந்த கே.எஸ்!… post thumbnail image
சென்னை:-தமிழ் சினிமாவின் மினிமம் கேரண்டி+தயாரிப்பாளர் விரும்பும் இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார். இவர் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த லிங்கா திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் இவர் இப்படத்தின் ப்ரோமோஷனுக்காக முன்னணி தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். இதில் தொகுப்பாளர் விஜய், அஜித் குறித்து கேட்டார்.

இதற்கு அவர், விஜய்யுடன் மின்சார கண்ணா படம் பணிபுரியும் போது மிகவும் அமைதியாக இருப்பார், அவரை எப்படியாவது பேச வைக்க வேண்டும் என்று, ஒரு நாள் பஸ்ஸில் செல்லும் போது நீங்கள் ஆடியே ஆக வேண்டும் என்று கட்டளையிட, செம்ம டான்ஸ் ஆடி கலாட்டா செய்து விட்டார்.

அதேபோல் அஜித்தின் கடின உழைப்பு வரலாறு படத்தில் தான் கண்டேன், இன்னும் 7 நாட்களில் படத்தை முடிக்க வேண்டும் என்பதால், இரவு-பகலாக கண் விழித்து நடித்து கொடுத்தார் என்று நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி