செய்திகள்,திரையுலகம் ‘இசைப்புயல்’ ஏ.ஆர். ரகுமான் இனி இசையமைக்க மாட்டாரா?…

‘இசைப்புயல்’ ஏ.ஆர். ரகுமான் இனி இசையமைக்க மாட்டாரா?…

‘இசைப்புயல்’ ஏ.ஆர். ரகுமான் இனி இசையமைக்க மாட்டாரா?… post thumbnail image
சென்னை:-தமிழ் சினிமாவில் எத்தனை இசையமைப்பாளர்கள் வந்தாலும் ‘இசைப்புயல்’ ஏ.ஆர். ரகுமான் அவர்களின் இசைக்கு ஒரு தனி கூட்டமே இருக்கிறது. இந்த ஆண்டு அவருடைய இசையமைப்பில் ‘கோச்சடையான்’, ‘காவியத்தலைவன்’, ‘ஐ’, ‘லிங்கா’ ஆகிய படங்கள் உருவாகியுள்ளன.

காவியத்தலைவன், லிங்கா, ஐ படங்களுக்காக கடந்த நான்கைந்து மாதங்களாக இடைவிடாமல் இரவு, பகல் என்றும் பாராமல் அவரும் அவருடைய குழுவினரும் கடுமையாக உழைத்திருக்கிறார்கள். ஏற்கெனவே இப்படங்களின் பாடல்கள் வெளிவந்து ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றுள்ளன. தொடர்ந்து ஓய்வு இல்லாமல் உழைத்ததால், ரகுமான் ஒரு மாதத்திற்கு ஓய்வு எடுக்கப் போவதாக கூறியுள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி