செய்திகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு 8 வயது சிறுவன் படுகொலை: வாலிபர் கைது!…

பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு 8 வயது சிறுவன் படுகொலை: வாலிபர் கைது!…

பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு 8 வயது சிறுவன் படுகொலை: வாலிபர் கைது!… post thumbnail image
லக்னோ:-உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள பார்பங்கி மாவட்டத்தைச் சேர்ந்த 8 வயது சிறுவனை பாலியல் பலாத்காரம் செய்த பின்னர் அவனை கொன்ற வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.இங்குள்ள ராம்நகர் பகுதியில் வசிக்கும் இரண்டாம் வகுப்பு மாணவனான அந்த 8 வயது சிறுவன் கடந்த சனிக்கிழமை பள்ளியில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தான்.

அவனை வழிமறித்து, தனிமையான பகுதிக்கு அழைத்துச் சென்ற ஒருவன் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாக்கியதோடு மட்டுமின்றி, அவனை கொன்றுப் போட்டுவிட்டு தப்பியோடி விட்டான்.
சந்தேகப்பட்ட உள்ளூர்வாசிகள், அதே பகுதியைச் சேர்ந்த நிதின் என்ற வாலிபரை பிடித்து தர்ம அடி போட்டபோது குற்றத்தை அவன் ஒப்புக் கொண்டான். இதனையடுத்து, போலீசார் அவனை கைது செய்து, வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி