செய்திகள் தர்மபுரியில் பள்ளி மாணவியுடன் 4 வாலிபர்கள் உல்லாசம்!…

தர்மபுரியில் பள்ளி மாணவியுடன் 4 வாலிபர்கள் உல்லாசம்!…

தர்மபுரியில் பள்ளி மாணவியுடன் 4 வாலிபர்கள் உல்லாசம்!… post thumbnail image
தர்மபுரி:-தர்மபுரி பாரதிபுரத்தையொட்டி சேலம் – பெங்களூர் ரெயில்வே பாதை உள்ளது. இந்த பகுதியில் 500–க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. ரெயில்வே பாதையையொட்டி மின் விளக்குகள் இல்லாததால் இரவில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் அடிக்கடி சமூக விரோத செயல்கள் நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு தனியார் பள்ளி மாணவி ஒருவர் இருள் சூழ்ந்த ரெயில்வே தண்டவாள பகுதியில் நடந்து சென்றுள்ளார்.

அவரை பின் தொடர்ந்து 4 வாலிபர்கள் சென்றனர். இதனை பார்த்து சந்தேகம் அடைந்த அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அங்கு சென்று பார்த்தனர். அப்போது பள்ளி மாணவியுடன் 4 வாலிபர்களும் உல்லாசமாக இருந்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் சத்தம் போட்டனர். அவர்களது சத்தம் கேட்டு மாணவியுடன் உல்லாசமாக இருந்த 4 வாலிபர்களும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இதனையடுத்து பொதுமக்கள் பள்ளி மாணவியை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர் தர்மபுரி பகுதியை சேர்ந்தவர் என்பதும், தனியார் பள்ளியில் படித்து வந்ததும் தெரியவந்தது. பின்னர் பொதுமக்கள் மாணவிக்கு அறிவுரை கூறி அவளது வீட்டிற்கு அழைத்து சென்று பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், பாரதிபுரத்தில் தண்டவாளத்தையொட்டி உள்ள பகுதிகளில் மின் விளக்குகள் சரியாக எரிவதில்லை. மேலும் அந்த பகுதியில் புதர் மண்டி காணப்படுவதால் இங்கு அதிகளவில் சமூக விரோத செயல்கள் நடைபெற்று வருகிறது. பள்ளி மாணவி 4 வாலிபர்களுடன் உல்லாசமாக இருந்தது அதிர்ச்சி அளிக்கிறது. இதுபோன்ற செயல்களை தடுக்க மின் விளக்குகளை சரியாக பராமரிக்க வேண்டும் என்று அவர்கள் கூறினர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி