செய்திகள்,திரையுலகம் நடிகர் அஜீத் படத்திற்காக ரிகர்சலில் ஈடுபடும் திரிஷா!…

நடிகர் அஜீத் படத்திற்காக ரிகர்சலில் ஈடுபடும் திரிஷா!…

நடிகர் அஜீத் படத்திற்காக ரிகர்சலில் ஈடுபடும் திரிஷா!… post thumbnail image
சென்னை:-கௌதம் மேனன் இயக்கி வரும் ‘என்னை அறிந்தால்’ படத்தில் அஜீத் தற்போது நடித்து வருகிறார். இதில் இவருக்கு ஜோடியாக அனுஷ்கா மற்றும் திரிஷா நடித்து வருகிறார்கள். விறுவிறுப்பாக நடந்து வரும் இதன் படப்பிடிப்பு தற்போது இறுதி கட்டத்தை எட்டி வருகிறது.

இப்படத்தில் திரிஷாவிற்கு சோலோ பாடல் ஒன்றை அமைத்திருக்கிறார்கள். அதற்காக திரிஷா ரிகர்சலில் ஈடுபட்டு வருகிறார். இதுகுறித்து டுவிட்டரில் திரிஷா, ‘என்னை அறிந்தால்’ படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பில் இருக்கிறோம். இதில் இடம் பெறும் சோலோ பாடலுக்காக என்னுடைய டார்லிங் பிருந்தா மாஸ்டருடன் ரிகர்சலில் ஈடுபட்டிருக்கிறேன். நான் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி