செய்திகள்,பொருளாதாரம்,முதன்மை செய்திகள் இந்திய மீனவர்கள் 61 பேரை கைது செய்தது பாகிஸ்தான்!…

இந்திய மீனவர்கள் 61 பேரை கைது செய்தது பாகிஸ்தான்!…

இந்திய மீனவர்கள் 61 பேரை கைது செய்தது பாகிஸ்தான்!… post thumbnail image
இஸ்லாமாபாத்:-எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இந்திய மீனவர்கள் 61 பேரை பாகிஸ்தான் கடற்படை கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பாகிஸ்தான் எல்லைக்குள் 11 படகுகளில் மீன் பிடித்ததாக குற்றம்சாட்டி 61 மீனவர்களையும் கைது செய்துள்ள பாகிஸ்தான் கடற்படை படகுகளையும் பறிமுதல் செய்துள்ளது.

அவர்கள் மீது வெளிநாட்டவர் மற்றும் மீன்பிடி சட்டப்பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து கராச்சியில் உள்ள டாக் காவல்நிலையத்தில் வைத்துள்ளதாக தெரியவந்துள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி