நியூயார்க்:-வடஅமெரிக்கா கண்டத்தில் தற்போது கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. இதில் அமெரிக்கா மற்றும் கனடா நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.அமெரிக்காவில் நியூயார்க் நகரம் உள்ளிட்ட பல இடங்களில் கடும் பனிப்புயல் வீசியது. இதனால் நியூயார்க் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள் முற்றிலும் முடங்கியுள்ளது.
பனிப்புயலுக்கு நேற்றுவரை 5 பேர் பலியான நிலையில் இன்று பலி எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. நியூயார்க் அருகே உள்ள பப்பல்லோ நகரில் 5 அடி உயரத்திற்கு பனி படர்ந்திருந்தது. பப்பல்லோ நகரின் தெற்கு மற்றும் கிழக்கு புறநகர் பகுதிகளில் பனிப்புயலின் கடும் தாக்கம் காரணமாகவே 10 பேரும் உயிரிழந்துள்ளது தெரியவந்துள்ளது. அப்பகுதியிலிருந்த நர்சிங் ஹோம் ஒன்று காலி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அம்மாகாண கவர்னரான ஆண்ட்ரூ எம். குவோமோ எமர்ஜென்சி பிறப்பித்து உத்தரவிட்டார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
Like this:
Like Loading...
தொடர்புடையவை:-

நியூயார்க்:-அமெரிக்காவில் நியூயார்க் நகரம், வடகிழக்கு அமெரிக்க நகரங்களில் பனிப்புயல் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. நியூஜெர்சி, மைனே, நியூஹம்ப்ஷயர் மாகாண நகரங்கள் குளிர்புயலின் பிடியில் சிக்கித்தவிக்கின்றன. வடகிழக்கு பகுதியில் பனிப்புயல், இதுவரை வரலாறு கண்டிராத அளவுக்கு இருக்கும் என கூறப்படுகிறது. பல இடங்களில் பனிப்புயல் மணிக்கு 130 கி.மீ. வேகத்தில் இருக்கும். மசாசூசெட்ஸ் மாகாணத்தில் பல இடங்களில் பனிப்பொழிவு 15 அங்குல அளவுக்கு இருக்கும். கடலோரப்பகுதிகளான கேப் காட், லாங் தீவு ஆகியவற்றில்…

நியூயார்க்:-அமெரிக்காவில் கிழக்கு, மத்திய மேற்கு பகுதிகளில் சில நாட்களாக கடும் பனிப்புயல் வீசியது. அதில் நியூயார்க், பாஸ்டன், நியூஜெர்சி நகரங்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளன. இங்கு 1 அடி முதல் 2 அடி உயரத்துக்கு பனிக்கட்டிகள் விழுந்து கிடக்கிறது. இதனால் இரவு நேரத்தில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. பகல் நேரத்திலும் பல இடங்களில் போக்குவரத்து முடங்கியது. இதன் விளைவாக பாஸ்டன் நகரில் நேற்று முன்தினம் குளிர் தாங்காமல் 9 பேர்…

வாஷிங்டன்:-அமெரிக்காவில் இரண்டாவது முறையாக மீண்டும் இந்த ஆண்டு கடும் குளிருடன் பனிப்புயல் தாக்கி வருகிறது. இதனால் அமெரிக்காவின் கிழக்கு கடற்கரை பகுதிகளில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. அங்கு சுமார் 2 அடி உயரத்திற்கு பனி கொட்டிக்கிடக்கிறது. போக்குவரத்துகள் பாதிக்கப்பட்டுள்ளதால் மக்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர். இன்னும் இரு நாட்களில் கடும் பனிப்பொழிவு ஏற்பட எச்சரிக்கப்பட்டுள்ளதால், குளிரானது மைனஸ் 10 முதல்-25 டிகிரி செல்சியசிற்கு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடுமையான பனிப்பொழிவிற்கு…