செய்திகள்,திரையுலகம் 48 மணி நேரம் தொடர்ந்து சண்டைபோட்ட இரட்டையர்கள்!…

48 மணி நேரம் தொடர்ந்து சண்டைபோட்ட இரட்டையர்கள்!…

48 மணி நேரம் தொடர்ந்து சண்டைபோட்ட இரட்டையர்கள்!… post thumbnail image
சென்னை:-குரு, கமல்நாத் என்ற இரட்டையர்கள் ஹீரோக்களாக அறிமுகமாகும் படம் குரு சுக்ரன். திரிபுரா, சாத்னா என்ற இரு ஹீரோயின்கள் அறிமுகமாகிறார்கள். இந்தப் படத்தின் கிளைமாக்ஸ் சண்டைக் காட்சி சென்னை பின்னி மில்லில் படமாக்கப்பட்டது. இதில் இரட்டை சகோதரர்கள் 48 மணி நேரம் தொடர்ந்து வில்லனுடன் மோதியிருக்கிறார்கள். இதுபற்றி படத்தின் இயக்குனர் ஆனந்த் கூறியதாவது:

படத்தின் முக்கிய பகுதி கிளைமாக்ஸ் சண்டைக் காட்சி. இந்த காட்சியில் ரிஸ்க் எடுத்து நடிக்க முடியுமா என்று டுவின்ஸ் சகோதரர்களிடம் கேட்ட பிறகே சண்டை இயக்குனர் மிரட்டல் செல்வா சண்டை காட்சிகளை வடிவமைத்தார். வில்லன் அருள்மணியுடன் இருவரும் மோதும் சண்டைக் காட்சியை தொடர்ச்சியாக 48 மணிநேரம் படமாக்கினோம். எந்த களைப்போ, சோர்வோ இல்லாமல் நடித்தார்கள்.

இந்த சண்டைக்காட்சி படத்தின் ஹைலைட்டாக இருக்கும், ஹீரோ, ஹீரோயின்கள் மட்டும்தான் புதுமுகம், ஆடுகளம் நரேன், செண்ட்ராயன், சுதா சந்திரன், சண்முகராஜன், ஸ்ரீரஞ்சனி, கருத்தம்மா ராஜஸ்ரீ என பழைய முகங்களும் நடிக்கிறார்கள். செல்லத்துரை ஒளிப்பதிவை கவனித்துக் கொள்கிறார். பிரபல இசை அமைப்பாளர் சந்திரபோஸ் மகன் சந்தோஷ் சந்திரபோஸ் இசை அமைக்கிறார். என்கிறார் ஆனந்த்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி