செய்திகள் ஐதராபாத் கல்லூரி வளாகத்தில் டெல்லி மாணவியை கற்பழித்த 5 மாணவர்கள்!…

ஐதராபாத் கல்லூரி வளாகத்தில் டெல்லி மாணவியை கற்பழித்த 5 மாணவர்கள்!…

ஐதராபாத் கல்லூரி வளாகத்தில் டெல்லி மாணவியை கற்பழித்த 5 மாணவர்கள்!… post thumbnail image
நகரி:-ஐதராபாத் தார்நாகா பகுதியில் இக்லு பல்கலைக்கழகம் உள்ளது. இங்குள்ள விடுதியில் படிக்கும் டெல்லியைச் சேர்ந்த 23 வயது மாணவி கடந்த 31ம் தேதி இரவு கல்லூரி வளாகத்தில் உள்ள மாணவர்கள் விடுதியில் இருக்கும் தனது நண்பரை பார்க்க சென்றார். ஆனால் விடுதி அறையில் நண்பர் இல்லை.

பக்கத்து அறையில் தங்கி இருக்கும் மாணவர்களிடம் விசாரித்தார். அந்த மாணவர்கள் தனது அறையில் மது விருந்து நடத்திக் கொண்டு இருந்தனர். விருந்தில் கலந்து கொள்ளும்படி டெல்லி மாணவியை அழைத்தனர். மிகவும் வற்புறுத்தியதால் விருந்தில் அவர் கலந்து கொண்டார்.விருந்து முடிந்ததும் போதை மயக்கத்தில் இருந்த மாணவியை 5 மாணவர்கள் கற்பழித்தனர். இதுகுறித்து அந்த மாணவி உஸ்மானியா பல்கலைக்கழக போலீசில் புகார் செய்தார். இதற்கிடையே கற்பழிப்பு தகவல் பரவியதும் பல்கலைக்கழகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய வேண்டும் என்று சில மாணவர்கள் போராட்டம் நடத்தினார்கள்.

இதையடுத்து அனந்தபுரத்தைச் சேர்ந்த நிதின் (25), கிழக்கு கோதாவரியைச் சேர்ந்த ராஜநரசிம்பா ஆகிய 2 மாணவர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் 3 மாணவர்களை பிடித்து விசாரித்து விடுவித்து விட்டனர். அரசியல்வாதிகளின் மகன்கள் என்பதால் போலீசார் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் விட்டு விட்டார்கள் என்று மாணவர் அமைப்பினர் குற்றம் சாட்டினார்கள். இதை கண்டித்து இன்று பந்த் நடத்தப் போவதாக மாணவர் அமைப்பினர் அறிவித்து உள்ளனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி