செய்திகள்,திரையுலகம் நடிகர் அஜீத்தை குத்தகை எடுத்த ஏ.எம்.ரத்னம்!…

நடிகர் அஜீத்தை குத்தகை எடுத்த ஏ.எம்.ரத்னம்!…

நடிகர் அஜீத்தை குத்தகை எடுத்த ஏ.எம்.ரத்னம்!… post thumbnail image
சென்னை:-இந்தியன் படம் தொடங்கி, நட்புக்காக, குஷி, ரன், பாய்ஸ், கில்லி, சிவகாசி என பல வெற்றி படங்களை தயாரித்தவர் ஏ.எம். ரத்னம். ஆனால் ஒரு கட்டத்தில் அவர் தயாரித்த கேடி, தர்மபுரி, பீமா போன்ற படங்கள அடுத்தத்து தோல்வியாக அமைந்ததால், கடன்பட்ட அவர், பின்னர் 5 ஆண்டுகளாக படமே தயாரிக்க முடியாத நிலையில் இருந்தார்.

அதன்காரணமாக, முன்னணி ஹீரோக்கள் யாருமே அவருக்கு கால்சீட் கொடுக்க முன்வரவில்லை.ஆனால் அஜீத் மட்டும்தான் அவருக்கு படம் நடித்து தர முன்வந்தார். அதையடுத்துதான் ஆரம்பம் படம் உருவானது. அந்த படம் நல்ல வசூலை கொடுத்ததால் ஓரளவு எனது கடனை இந்த படம் மூலம் அடைத்துவிட்டேன் என்று அப்போது கூறியிருந்தார் ஏ.எம்.ரத்னம். அதையடுத்து உங்களுக்கு மீண்டும் ஒரு படத்தில் நடித்துத் தருகிறேன். மீதமிருக்கும் கடனையும் அடைத்து விடுங்கள் என்று சொல்லி, இப்போது கெளதம்மேனன் இயக்கும் படத்தையும் ஏ.எம்.ரத்னத்தின் சூர்யா மூவீசுக்காக நடித்துக் கொண்டிருக்கிறார் அஜீத்.

இந்தநிலையில், இதன்பிறகு வீரம் படத்தை இயக்கிய சிவா இயக்கும் புதிய படத்திலும் நடிக்கிறார் அஜீத. அதோடு, அப்படத்தையும் ஏ.எம்.ரத்னமே தயாரிப்பதாக செய்தி வெளியாகியிருக்கிறது. இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ள டைரக்டர் சிவா, படத்தின் ஸ்கிரிப்ட் வேலைகள் முடிவடைந்து விட்ட நிலையில், மற்ற நடிகர் நடிகைகள் தேர்வு தற்போது நடந்து கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி