செய்திகள்,திரையுலகம்,முதன்மை செய்திகள் பெண் மானபங்க வழக்கு: பிரபல நடிகை சனாகான் நண்பருடன் கைது!…

பெண் மானபங்க வழக்கு: பிரபல நடிகை சனாகான் நண்பருடன் கைது!…

பெண் மானபங்க வழக்கு: பிரபல நடிகை சனாகான் நண்பருடன் கைது!… post thumbnail image
சென்னை:-தமிழில் சிம்பு ஜோடியாக சிலம்பாட்டம் படத்தில் நடித்தவர் நடிகை சனாகான். தம்பிக்கு இந்த ஊரு, பயணம் படங்களிலும் நடித்துள்ளார். சல்மான்கானுடன் ஜெய்ஹோ இந்தி படத்தில் நடித்துள்ளார். மும்பையை சேர்ந்த 15 வயது இளம் பெண்ணை கடந்த வருடம் மே மாதம் சனாகான் கடத்த முயன்றதாக புகார் கூறப்பட்டது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து சனாகானையும் அவரது உறவினர் நவேத் கானையும் கைது செய்தனர். அவர்களின் நண்பர்கள் மேலும் 3 பேரும் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கில் சனாகான் முன் ஜாமீன் பெற்று வெளியே வந்தார். அவர் முன்ஜாமீன் வாங்கியதை விமர்சித்து பத்திரிகையொன்றில் கட்டுரை வெளியானது. இந்த கட்டுரையை வெளியிடச் செய்தவர் பூனம் கன்னா என்பவர்தான் என்று சனாகான் சந்தேகப்பட்டார். இதையடுத்து அந்தேரியில் உள்ள ஆஸ்பத்திரியில் உடல் பரிசோதனைக்காக சென்ற பூனம் கன்னாவை சனாகான் தடுத்து நிறுத்தி மிரட்டினார். கையை பிடித்து முறுக்கியதாகவும் கூறப்படுகிறது.

சனாகானுடன் அவரது நண்பர் இஸ்மாயில்கான், வேலைக்காரர் ராமுகனோ ஜியா ஆகியோரும் அப்பெண்ணை மிரட்டி மானபங்கம் செய்துள்ளனர். இது குறித்து பூனம் கன்னா அந்தேரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து சனாகான் மற்றும் அவரது நண்பர் இஸ்மாயில்கான், வேலைக்காரர் மூவரையும் கைது செய்தனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி