செய்திகள்,திரையுலகம் இந்திப்பட வாய்ப்பை தவிர்த்த நடிகை நயன்தாரா!…

இந்திப்பட வாய்ப்பை தவிர்த்த நடிகை நயன்தாரா!…

இந்திப்பட வாய்ப்பை தவிர்த்த நடிகை நயன்தாரா!… post thumbnail image
சென்னை:-நடிகை நயன்தாரா தற்போது தமிழ், தெலுங்கு சினிமாக்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நேரத்தில் அவர் நடித்த ஸ்ரீராமராஜ்ஜியம், அனாமிகா படங்களைப் பார்த்த சில பாலிவுட் இயக்குனர்கள் ஹீரோயினுக்கு முக்கியத்துவமுள்ள கதைகளில் நடிக்க நயன்தாராவுக்கு சமீபத்தில அழைப்பு விடுத்தார்களாம். ஆனால், கதையைகூட கேட்காமலேயே இந்தியில் நடிக்க எனக்கு ஆர்வமில்லை என்று சொல்லி அனுப்பி விட்டாராம் நயன்தாரா.

ஆனால் இதுபற்றி நயன்தாரா தரப்பில் விசாரித்தபோது, இந்தியில் முன்னணி நடிகையாக வேண்டும் என்பதுதான் நயன்தாராவின் மனதளவில் உள்ள ஆசையே. ஆனால் தற்போது பிரபுதேவா இந்தியில் படங்கள் இயக்கி வருவதால், அவர் இருக்கிற பீல்டுக்கு சென்றால், பழைய கதைகளை கிளறி விட்டு மீண்டும் கிசுகிசு பரப்புவார்கள். அதனால் மனநிம்மதிதான் கெடும் என்பதால்தான் இந்தி சினிமாவே வேண்டாம் என்ற முடிவில் நயன்தாரா இருப்பதாக சொல்கிறார்கள்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி