செய்திகள்,திரையுலகம் சிறு வயதில் மண் தரையில் படுத்து கஷ்டப்பட்டேன் – விஜய் பட ஹீரோயின் பேட்டி!…

சிறு வயதில் மண் தரையில் படுத்து கஷ்டப்பட்டேன் – விஜய் பட ஹீரோயின் பேட்டி!…

சிறு வயதில் மண் தரையில் படுத்து கஷ்டப்பட்டேன் – விஜய் பட ஹீரோயின் பேட்டி!… post thumbnail image
சென்னை:-நடிகர் விஜய் ஜோடியாக நண்பன் படத்தில் நடித்தவர் இலியானா. இந்தி, தெலுங்கிலும் முன்னணி நடிகையாக இருக்கிறார். கோடி கோடியாய் சம்பளம் வாங்கி ஆடம்பரமாக வாழ்கிறார்.சிறு வயதில் சந்தித்த கஷ்டங்கள் பற்றி இலியானா ஐதராபாத்தில் உருக்கமான பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:–நான் கோடி கோடியாய் சம்பாதிக்கிறேன். மகாராணி போல் வாழ்கிறேன் என்றும் பலர் பேசுவதை பார்க்கிறேன். இவர்களுக்கு நான் சிறு வயதில் பட்ட கஷ்டங்கள் தெரியாது.

எனக்கு 20 வயது இருக்கும்போது பெற்றோருடன் மும்பையில் இருந்தேன். என் தந்தை வருமானத்தை வைத்து சொந்த வீடு வாங்க முடியவில்லை. வாடகை வீட்டில்தான் இருந்தேன். அதன் பிறகு என்னையும் தங்கையையும் அழைத்துக் கொண்டு எனது தாய் கோவா சென்றார். அங்கு சில காலம் இருந்தோம். என் தங்கை கஷ்டப்பட்டு சிறிய வீடு ஒன்றை சொந்தமாக வாங்கினார். அந்த வீடு கட்டப்பட்ட நிலையில் அரை குறையாக இருந்தது. வாடகை மிச்சமாகும் என கருதி வீட்டை கட்டி முடிக்கும் முன்பே அங்கு குடிபோய் விட்டோம். வீடு பூச்சு வேலைகள் முடியாமல் இருந்தது. தரையும் போடவில்லை.

கொத்தனாருக்கு கூலி கொடுக்க வேண்டி இருந்ததால் வேண்டாம் என்று அனுப்பி விட்டோம். நாங்களே மண் சுமந்து பூச்சு வேலைகள் செய்தோம். அம்மா கூலி மாதிரி வேலை பார்த்தார். மண் தரையில்தான் படுத்தோம். இப்போது என்னை பார்த்து அதிர்ஷ்டக்காரி செல்வசெழிப்பில் மிதிக்கிறாள் என்று பலர் பேசும்போது சிரிப்புதான் வருகிறது. நானும் சாதாரண குடும்பத்து பெண்தான். கஷ்டப்பட்டுதான் இந்த நிலைக்கு வந்து இருக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி