செய்திகள்,திரையுலகம் ‘கத்தி’ படத்தை ஓரங்கட்டுகிறதா திரையரங்குகள்!…

‘கத்தி’ படத்தை ஓரங்கட்டுகிறதா திரையரங்குகள்!…

‘கத்தி’ படத்தை ஓரங்கட்டுகிறதா திரையரங்குகள்!… post thumbnail image
சென்னை:-‘கத்தி’ படம் உலகம் முழுவது 1500 திரையரங்குகளுக்கு மேல் வரவிருக்கிறது. ஆனால், இப்படத்தை வெளியிட்டால் தங்கள் திரையரங்கிற்கு ஏதும் பிரச்சனை வருமா?… என்று எண்ணி சில தியேட்டர்கள் தற்போது பின் வாங்குகின்றன.மேலும் இந்த சூழலைப் பயன்படுத்தி பூலோகம் படத்தை வெளியிடவும் திட்டமிட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

கத்தி படத்தை வரும் 22ம் தேதி வெளியாக விடமாட்டோம் என வேல்முருகன் தலைமையிலான தமிழ் அமைப்பினர் கூறியுள்ளனர். இதனை திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களை அழைத்து நேரடியாகவும் கூறிவிட்டனர்.இதனால் படத்தை வாங்க தயக்கம் காட்டி வருகின்றனர். மேலும் நாளை நடக்கும் கூட்டத்தில் தங்களின் நிலைப்பாட்டினைக் கூறுவதாக வேல் முருகனிடம் திரையரங்க உரிமையாளர்களும் விநியோகஸ்தர்களும் கூறியுள்ளனர்.

நாளைய கூட்டத்திலும் கத்திக்கு எதிரான நிலை தொடர்ந்தால், பூஜை படத்துக்கு கூடுதல் அரங்குகள் கிடைக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் ஆஸ்கர் ரவிச்சந்திரன் தனது பூலோகம் படத்தை திடீரென வெளியிடவும் வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி