செய்திகள்,விளையாட்டு நான் ரன் குவிக்கும் எந்திரம் அல்ல – விராட் கோலி!…

நான் ரன் குவிக்கும் எந்திரம் அல்ல – விராட் கோலி!…

நான் ரன் குவிக்கும் எந்திரம் அல்ல – விராட் கோலி!… post thumbnail image
புது டெல்லி:-இந்திய துணை கேப்டன் விராட் கோலி நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:– மீண்டும் பார்முக்கு திரும்ப எனக்கு ஒரு சிறந்த இன்னிங்ஸ் தேவைப்பட்டது. அது கடந்த ஆட்டத்தில் (62 ரன்) நடந்து விட்டது. நிபுணர்களும், மீடியாக்களும் நான் ஆட்டம் இழக்கும் விதம் குறித்து விமர்சிப்பது வேடிக்கையானது.

கடந்த இரண்டு, மூன்று ஆட்டங்களில் நான் சரியாக ஆடவில்லை. உடனே மக்கள் நீங்கள் பெரிய அளவில் ரன் குவிக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். கடந்த 4–5 ஆண்டுகளாக எல்லா வடிவிலான கிரிக்கெட்டிலும் நான் தொடர்ந்து நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்கள் குவித்ததை அவர்கள் மறந்து விட்டார்கள். இதை நான் பந்தாவுக்காக சொல்லவில்லை. இது தான் எனது இயல்பு. நாங்கள் மனிதர்கள். எந்திரங்கள் அல்ல என்பதை மக்கள் மறந்து விடக்கூடாது. இவ்வாறு கோலி கூறினார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி