செய்திகள்,திரையுலகம் ஈசிஆரில் பிரமாண்டமாக தயராகிறது நடிகர் விஜய் படத்துக்கான தர்பார் செட்!…

ஈசிஆரில் பிரமாண்டமாக தயராகிறது நடிகர் விஜய் படத்துக்கான தர்பார் செட்!…

ஈசிஆரில் பிரமாண்டமாக தயராகிறது நடிகர் விஜய் படத்துக்கான தர்பார் செட்!… post thumbnail image
சென்னை:-கத்தி படப்பிடிப்பு முடிந்ததும், சில நாட்கள் மட்டும் ரெஸ்ட் எடுத்துவிட்டு, சிம்புதேவன் இயக்கும் மாரீசன் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ளவே ஆரம்பத்தில் திட்டமிட்டிருந்தார். இந்த திட்டத்தை பிறகு மாற்றிக் கொண்டுவிட்டார் விஜய்.

கத்தி படம் வெளியான பிறகு மாரீசன் படப்பிடிப்பு தொடங்கினால் போதும் என்று சொல்லிவிட்டாராம். விஜய் இப்படி சொன்னது சிம்புதேவன் மற்றும் அவரது யூனிட்டுக்கு உள்ளுக்குள் மனநிம்மதியை தந்திருக்கிறது. காரணம்…சென்னையிலிருந்து மகாபலிபுரம் செல்லும் கிழக்குக்கடற்கரைசாலையில் கோவளம் அருகில் உள்ள ஒரு கிராமத்தில் சுமார் 100 எக்கர் பரப்பளவு கொண்ட நிலத்தில் அரண்மனை மற்றும் தர்பார் செட்டை பிரமாண்டமாக அமைத்து வருகிறார் கலை இயக்குநர் முத்துராஜ். வேலையில் சுணக்கம் ஏற்பட்டதால் திட்டமிட்ட தேதியில் செட் வேலைகள் முடியவில்லை. விஜய் படப்பிடிப்பை தள்ளி வைத்ததால் தற்போது ரிலாக்ஸாக செட் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி