செய்திகள்,திரையுலகம் நடிகை திரிஷாவுக்கு எதிராக திரண்ட குடிமகன்கள்!…

நடிகை திரிஷாவுக்கு எதிராக திரண்ட குடிமகன்கள்!…

நடிகை திரிஷாவுக்கு எதிராக திரண்ட குடிமகன்கள்!… post thumbnail image
சென்னை:-டெல்லி விலங்கியல் பூங்காவில் ஒரு மாணவனை புலி அடித்து கொன்ற விவகாரத்தில், ஐந்தறிவு மிருகத்திற்கு என்ன தெரியும். நாம்தான் கவனமாக இருந்திருக்க வேண்டும் என்று அந்த புலியை கொல்ல வேண்டும் என்று கருத்து சொன்னவர்களுக்கு எதிராக தனது கருத்தினை பதிவு செய்திருந்தார் திரிஷா.

அதையடுத்து சமீபத்தில் குடித்து விட்டு வாகனம் ஓட்டுவதினால்தான் விபத்துக்குள் அதிகமாக நடக்கிறது. அதனால் யாராவது போதையில் வாகனம் ஓட்டினால் அவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று சாடியிருந்தார். இது நல்ல விசயம்தான் என்றாலும், குடிமகன்களால் திரிஷரின் இந்த கருத்தினை தாங்கிக்கொள்ள முடியவிலலை.

அதனால் அவரது இணையதளத்திற்குள் புகுந்து, ஆட்டக்கடிச்சு, மாட்டக்கடிச்சு இப்ப எங்களோட அடிமடியிலேயே கையை வச்சிட்டீங்களா? இதெல்லாம் ரொம்ப தப்பும்மா? என்று தகாத வார்த்தைகளால் வசைபாடுகிறார்களாம். இருப்பினும், பொது வாழ்க்கையில் இதெல்லாம் சகஜம் என்று எதையும் கண்டுகொள்ளாமல் அமைதி காத்து வருகிறார் திரிஷா.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி