செய்திகள்,திரையுலகம் கன்னட சினிமாவை முற்றுகையிடும் நடிகை தமன்னா!…

கன்னட சினிமாவை முற்றுகையிடும் நடிகை தமன்னா!…

கன்னட சினிமாவை முற்றுகையிடும் நடிகை தமன்னா!… post thumbnail image
சென்னை:-இந்தியில் எண்டர்டெயின்மெனட், தெலுங்கில் ஆகடு படங்களில் நடித்து முடித்த பிறகு தமன்னாவின் கைவசம் படங்கள் இல்லை. அடுத்தபடியாக ராஜேஷ்.எம் இயக்கத்தில் ஆர்யா நடிக்கும் படம்தான் உள்ளதாம். அதனால் தற்போது தனது தாய்வீடான மும்பைக்கு சென்று பெற்றோர் மற்றும் தோழிகளுடன் ஜாலியாக பொழுதை கழித்துக்கொண்டிருக்கிறார் தமன்னா.

ஒருவேளை அடுத்த மாதம் ஆர்யா நடிக்கும் படவேலைகள் தொடங்கப்படவில்லை என்றால், குடும்பத்துடன் வெளிநாடுகளுக்கு டூர் செல்லவும் திட்டமிட்டுள்ளாராம் தமன்னா. கடந்த பல வருடங்களாக தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளிலும் ஓய்வில்லாமல் நடித்துக்கொண்டிருந்த தமன்னா, அடுத்தபடியாக தென்னிந்தியாவில் சரியான படவாய்ப்புகள் கிடைக்காதபட்சத்தில் திரிஷா பாணியில் கன்னட சினிமாவை முற்றுகையிடவும் திட்டமிட்டுள்ளாராம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி