அப்போது அந்த வாலிபர் தன்னை காதலித்ததாகவும், அவருடன் நெருக்கமாக இருந்த போது செல்போனில் படம் பிடித்து அதனை இன்டர்நெட்டில் வெளியிடுவேன் என மிரட்டி அவ்வப்போது காரில் அழைத்து வந்து உல்லாசமாக இருப்பதாகவும், அவரது மிரட்டலுக்கு பயந்து இங்கு வந்ததாக கூறினார். இதையடுத்து மாணவிக்கு அறிவுரை கூறி போலீசார் அவரை அனுப்பி வைத்தனர்.பின்னர், அந்த வாலிபரிடம் விசாரித்த போது கோழிப் போர்விளையை சேர்ந்த ராஜ்குமார் (வயது 28) என்பது தெரிய வந்தது. டெம்போ டிரைவரான இவர் அப்பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். சில நாட்களில் கருத்து வேறுபாட்டால் மனைவி பிரிந்து சென்று விட்டாராம். இதனால் ஆத்திரமடைந்த ராஜ்குமார் மனைவியை கத்தியால் குத்தி உள்ளார்.
அப்போது பொது மக்கள் அவரை பிடித்து போலீசில் ஒப்படைத்துள்ளனர். போலீசார் ராஜ்குமார் மீது கொலை முயற்சி வழக்குபதிவு செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைக்க கொண்டு சென்ற போது தப்பி ஓடி விட்டு பின்னர் பிடிபட்டவர் என்பதும் விசாரணையில் தெரியவந்தது.அவரது செல்போனை பறிமுதல் செய்து போலீசார் சோதனை செய்தனர். அதில் இளம்பெண்களின் ஆபாச படங்கள் இருந்தன. எனவே இவர் மேலும் பல மாணவிகளுடன் நெருக்கமாக பழகி அதனை வீடியோ எடுத்திருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். தற்போது அவர் மீது குற்றவியல் நடைமுறை சட்டம் 110–வது பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி