செய்திகள்,திரையுலகம் இரண்டு விதமாக டப்பிங் பேசிய நடிகர் விஜய்!…

இரண்டு விதமாக டப்பிங் பேசிய நடிகர் விஜய்!…

இரண்டு விதமாக டப்பிங் பேசிய நடிகர் விஜய்!… post thumbnail image
சென்னை:-கத்தி படத்தின் ஆடியோ விழாவின்போதும் இந்த சர்ச்சை வெடித்து அசம்பாவித சம்பவங்கள் நிகழ்ந்து விடுமோ என்கிற அச்சம் நிலவியது. அதனால் பலத்த போலீஸ் பந்தோபஸ்துடன் விழாவை நடத்தினர். ஆனால், அதன்பிறகு கத்திக்கு எதிராக கோஷம் எழுப்பியவர்கள் அடங்கி விட்டனர். இந்நிலையில, தற்போது தீபாவளிக்கு படத்தை வெளிக்கொண்டு வந்து விட வேண்டும் என்று விறுவிறுப்பாக வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது.

தற்போதைய நிலவரப்படி சில காட்சிகளும், செல்பிபுள்ள பாடல் காட்சி மட்டுமே படமாக்கப்பட வேண்டியிருக்கிறது. இந்த நிலையில், இறுதிகட்ட பணிகளான டப்பிங், பின்னணி இசைகோர்ப்பு பணிகளும் துரிதமாக நடந்து கொண்டிருக்கிறது.மேலும், அழகிய தமிழ் மகன் படத்தில் இரண்டு வேடங்களில் நடித்த விஜய் தற்போது கத்தியில் இரண்டு வேடங்களில் நடித்திருக்கிறார்.

ஜீவானந்தம், கதிரேசன் என்ற அந்த இரண்டு வேடங்களிலும் மாறுபட்ட கெட்டப்புகளில் மாறுபட்ட பர்பாமென்ஸ் கொடுத்து நடித்திருப்பவர் கடந்த சில தினங்களாக தனக்கான டப்பிங் பேசி முடித்துள்ளார். அதோடு இரண்டு கதாபாத்திரங்களுக்கும் நடிப்பில் வித்தியாசம் காட்டியது போன்று டப்பிங் பேசுவதிலும் வித்தியாசமான குரலை வெளிப்படுத்தியிருக்கிறாராம் விஜய்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி