இதற்கு முன்னாலும் இந்த ஆண்மகன் தனது மனைவியைத் துன்புறுத்தியுள்ளதாகக் கூறப்படுகின்றது. இவரது விரல் நகங்கள் நீக்கப்பட்டிருப்பதாகவும், மற்றொருமுறை ஒரு வாரத்திற்கு உணவு, தண்ணீர் இல்லாமல் இந்தப் பெண் ஒரு அறையில் அடைக்கப்பட்டிருந்தார் என்றும் தைகன்டி மகளிர் விவகாரத்தலைவர் சக்கியா ரிசாய் பிபிசி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.சம்பவத்தில் இடம் பெற்றவர்களின் பெயர்கள் வெளியிடப்படாத போதிலும் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட ஒரு வாதத்தின் விளைவாகவே கணவன் இவ்வாறு நடந்து கொண்டுள்ளான் என்று தைகன்டி மாகாண குற்றப்பிரிவு தலைவர் முகமது அலி அடய் குறிப்பிட்டுள்ளார்.
பெண்களுக்கு எதிரான இதுபோன்ற கொடுமைகள் ஆப்கானிஸ்தானில் குறைவு என்றபோதிலும் தற்போது இத்தகைய குற்றங்கள் அதிகரித்து வருவதாகவே மனித உரிமைக் கழகம் குறிப்பிடுகின்றது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி