செய்திகள்,பொருளாதாரம்,முதன்மை செய்திகள் இந்தியாவின் முதல் 100 பணக்காரர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட விஜய் மல்லையா!…

இந்தியாவின் முதல் 100 பணக்காரர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட விஜய் மல்லையா!…

இந்தியாவின் முதல் 100 பணக்காரர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட விஜய் மல்லையா!… post thumbnail image
சிங்கப்பூர்:-இந்திய பணக்காரர்கள் பட்டியலை போர்ப்ஸ் நிறுவனம் வெளியிட்டது. அதில் முதல் 100 பணக்காரர்கள் பட்டியலில் இருந்து பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.2013 ஆம் ஆண்டு 800 மில்லியன் டாலர்கள் மதிப்புள்ள சொத்துக்களுடன் 84-வது இடத்தில் இருந்த மல்லையா தனக்கு சொந்தமான கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம் நஷ்டமடைந்து கடனில் சிக்கியதால் மல்லையா கடன் ஏய்ப்பாளராக அறிவிக்கப்பட்டார்.

இதையடுத்து, அவரது சொத்து மதிப்பும் குறைந்தது. அதன் அடிப்படையில் நீக்கப்பட்டதாக போர்ப்ஸ் தெரிவித்துள்ளது. ஏற்கனவே, கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக பணக்காரர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டிருந்தார் மல்லையா. கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம் 17 வங்கிகளுக்கு ரூ.7,600 கோடி வாங்கிய கடனை திருப்பி தர வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இந்த ஆண்டு மல்லையா உட்பட 11 பேர் முதல் 100 பணக்காரர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். எனினும், தொடர்ந்து சில ஆண்டுகளாகவே மல்லையாவின் சொத்து மதிப்பு சரிந்து வருவது துரதிருஷ்டவசமானது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி