செய்திகள்,தொழில்நுட்பம்,முதன்மை செய்திகள் தண்ணீரில் நீந்தி வாழ்ந்த டைனோசரஸ் படிவம் கண்டுபிடிப்பு!…

தண்ணீரில் நீந்தி வாழ்ந்த டைனோசரஸ் படிவம் கண்டுபிடிப்பு!…

தண்ணீரில் நீந்தி வாழ்ந்த டைனோசரஸ் படிவம் கண்டுபிடிப்பு!… post thumbnail image
லண்டன்:-பலகோடி ஆண்டு முன்பு டைனோசரஸ் என்ற ராட்சத விலங்கு வாழ்ந்து மடிந்துள்ளன. அவற்றின் எலும்பு கூடுகள், படிவங்கள் மற்றும் முட்டைகளை நிபுணர்கள் கண்டுபிடித்து ஆய்வு மேற்கொண்டுள்ளனர். அவை நிலத்தில் மட்டும் வாழ்ந்தவை என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் மீன்களை போன்று தண்ணீரில் நீந்தி வாழ்ந்த டைனோசரஸ் எலும்புகூடு படிவங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள சகாரா பாலைவனத்தில் இவற்றை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இது நீரிலும், நிலத்திலும் வாழக்கூடியவை. இதற்கு ‘ஸ்பைனோசரஸ் இஷிப்டியாகஸ்’ என பெயரிடப்பட்டுள்ளது.20 டன் மெட்ரிக் எடை கொண்டது. ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்ட ‘‘ட்ரையானோசரஸ் ரெஸ்’’ என்ற டைனோசரசைவிட மிகப்பெரியது ஆகும். மீன்களை பிடித்து சாப்பிடக்கூடிய நீண்ட நெடிய கோரைப் பற்கள் உள்ளன.

விளைந்து நெளியகூடிய நீண்ட கழுத்து உள்ளது. தண்ணீரில் நீந்தும் வகையில் கால் பாதங்கள் உள்ளன. இவை கடலில் சுறா மீன்களுடன் நீந்தி வாழ்ந்திருக்கலாம் என கருதப்படுகிறது.இந்த டைனோசரஸ்களுக்கு சுறா மீன்கள் விருப்பமான உணவாக இருந்திருக்கலாம். அவற்றை அவை விருந்து போன்று சுவைத்து சாப்பிட்டு இருக்கலாம் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி