செய்திகள்,திரையுலகம் ‘ஐ’ படப்பிடிப்பிலிருந்து பாதியில் வெளியேறிய நடிகை எமி ஜாக்சன்!…

‘ஐ’ படப்பிடிப்பிலிருந்து பாதியில் வெளியேறிய நடிகை எமி ஜாக்சன்!…

‘ஐ’ படப்பிடிப்பிலிருந்து பாதியில் வெளியேறிய நடிகை எமி ஜாக்சன்!… post thumbnail image
சென்னை:-‘ஐ’ படத்தை தீபாவளி அன்று ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ள தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிசந்திரன், 20000 தியேட்டர்களில் ரிலீஸ் செய்ய இருக்கிறாராம். அவற்றில் சீனாவில் மட்டும் 15000 தியேட்டர்களில் ரிலீஸ் ஆகிறதாம் ஐ படம். தமிழ்த்திரையுலகம் மட்டுமல்ல இந்தியத்திரையுலகம் கண்டிராத வகையில் ஐ படத்தைப் பற்றிய அசத்தல் செய்திகள் வெளியாகிக்கொண்டிருக்கும் அதே நேரம், இன்னொரு தகவலும் அடிபடுகிறது.

சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேபில் ஐ படத்துக்காக போடப்பட்ட செட் மாதக்கணக்கில் பிரிக்காமல் அப்படியே கிடக்கிறது. காரணம், அந்தப் பாடல்காட்சியில் நடிக்க வேண்டிய எமிஜாக்சன் கால்ஷீட் தர மறுத்ததுதான். கடந்த சில மாதங்களுக்கு முன் குறிப்பிட்ட அந்த செட்டில் படப்பிடிப்பு துவங்கியபோது கேரவானில் மேக்கப்போட்டுக் கொண்டிருந்தார் எமி.

தனக்கு சேர வேண்டிய சம்பள பாக்கியை அன்று தருவதாக சொன்ன தயாரிப்பாளர் தரவே இல்லை. கடுப்பான எமி, மேக்கப்பை கலைத்துவிட்டு நேராக ஹோட்டலுக்கு சென்றுவிட்டார். அன்றிரவே லண்டனுக்கும் புறப்பட்டுப்போய்விட்டார். சம்பளத்தை செட்டில் பண்ணினால்தான் பாடல் காட்சியில் நடிக்க வருவேன் என்று சொல்லிவிட்டார். இந்த பிரச்சனையினால் பாடல் காட்சி படமாக்கப்படாமலே இருக்கிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி