செய்திகள்,முதன்மை செய்திகள்,விளையாட்டு உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்: பதக்கத்தை உறுதி செய்தார் பி.வி.சிந்து!…

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்: பதக்கத்தை உறுதி செய்தார் பி.வி.சிந்து!…

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்: பதக்கத்தை உறுதி செய்தார் பி.வி.சிந்து!… post thumbnail image
கோபன்ஹேகன்:-டென்மார்க்கின் கோபன்ஹேகன் நகரில் நடைபெற்று வரும் உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவுக்கான காலிறுதி ஆட்டங்கள் நடைபெற்றன. ஆந்திர மாநிலம் ஐதராபாத்தைச் சேர்ந்த பி.வி.சிந்து, காலிறுதி ஆட்டத்தில் சீனாவின் 2ம் தரநிலை வீராங்கனை ஷிஜியான் வாங்கை எதிர்கொண்டார்.

ஆட்டம் தொடங்கியதில் இருந்து சீன வீராங்கனைக்கு கடும் சவால் அளித்தார் சிந்து. ஒரு கட்டத்தில் 15-15 என்ற சமநிலை இருந்தபோது, சிந்து அந்த செட்டை கைப்பற்றும் வாய்ப்பு அதிகம் இருந்தது. அதன்பின்னர் ஆட்டத்தை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்த வாங், முதல் செட்டை 21-19 என்ற புள்ளி கணக்கில் வென்றார்.

அதன்பின்னர் கடுமையான ஆட்டத்தை வெளிப்படுத்திய சிந்து, 21-19, 21-15 என அடுத்தடுத்து இரண்டு செட்களை கைப்பற்றி அரையிறுதியை உறுதி செய்தார்.இதன்மூலம் உலக போட்டியில் இரண்டு பதக்கங்கள் பெறும் முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை சிந்து பெறுகிறார். கடந்த ஆண்டு உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலம் வென்றது குறிப்பிடத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி