செய்திகள்,திரையுலகம் மீண்டும் நடிக்க வருகிறார் ‘ஓ போடு’ நடிகை!…

மீண்டும் நடிக்க வருகிறார் ‘ஓ போடு’ நடிகை!…

மீண்டும் நடிக்க வருகிறார் ‘ஓ போடு’ நடிகை!… post thumbnail image
சென்னை:-ராமராஜன் ஜோடியாக வில்லுப் பாட்டுக்காரன் படத்தில் அறிமுகமானவர் நடிகை ‘ராணி‘. அதற்கு பிறகு குத்துப்பட்டு, கிளாமர்பாட்டு, வில்லி வேஷம் என்று எல்லா மொழிகளிலும் சேர்த்து 400 படங்களுக்கு மேல் நடித்து முடித்துவிட்ட அவர். சில காலம் நடிப்பதை நிறுத்தி இருந்தார்.

தற்போது அனுஷ்கா நடிக்கும் “ராணி ருத்ரம்மா தேவி” “பிரேம்ல பட்டாண்டி” ஒக லைலா கோசம்” “ 3 இடியட்ஸ்” போன்ற படங்களில் முக்கிய வேடங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். தமிழிலும் கவனம் செலுத்த இருக்கிறார்.வெள்ளரிக்க பிஞ்சு வெள்ளரிக்கா (காதல்கோட்டை), ஓ போடு ஓ போடு (ஜெமினி) மாதிரி ஒற்றை பாடலுக்கு ஆட ஐடியா உண்டா? என்று கேள்வி கேட்கும் முன்பே, மறுத்த அவர் சாரி.நோ டான்ஸ்! ஒன்லி கேரக்டர்ஸ் மட்டும் தான், அம்மாவா, அக்காவா, அண்ணியா, வில்லியா? எதுவானாலும் ஓ.கே நான் ரெடி நீங்க ரெடியா. என்று கேட்டார் ராணி.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி