செய்திகள்,திரையுலகம்,முதன்மை செய்திகள் அஞ்சான் பாக்ஸ் ஆபீசில் சாதனை படைக்கும் – படக்குழுவினர் மகிழ்ச்சி…!

அஞ்சான் பாக்ஸ் ஆபீசில் சாதனை படைக்கும் – படக்குழுவினர் மகிழ்ச்சி…!

அஞ்சான் பாக்ஸ் ஆபீசில் சாதனை படைக்கும் – படக்குழுவினர் மகிழ்ச்சி…! post thumbnail image
இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா-சமந்தா நடிப்பில் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் படம் ‘அஞ்சான்’. பெரும் எதிர்பார்ப்புடன் வெளிவந்த இப்படத்தை தமிழ் மட்டுமில்லாது தெலுங்கில் ‘சிகந்தர்’ என்ற பெயரிலும் வெளியிட்டிருந்தனர். இருமொழிகளிலும் ஒரேநேரத்தில் வெளிவந்த இப்படத்தை யுடிவி நிறுவனமும், லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது.

இப்படம் இந்தியாவில் மட்டுமல்லாது பல்வேறு நாடுகளிலும் திரையிடப்பட்டுள்ளது. இந்நிலையில் முதல் நாளிலேயே இப்படம் தமிழ்நாட்டில் மட்டும் ரூ.11.5 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

மேலும், பிற நாடுகளிலும் இப்படம் நல்ல வசூலை வாரிக்குவித்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். ஆஸ்திரேலியாவில் ரூ.22.82 லட்சமும், யூ.கே.வில் ரூ.41.50 லட்சமும் வசூலித்துள்ளதாம்.

உலகம் முழுவதும் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாகவும், கண்டிப்பாக ‘அஞ்சான்’ குறைந்த நாட்களிலேயே பாக்ஸ் ஆபீசில் புதிய சாதனை படைக்கும் எனவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி