செய்திகள்,திரையுலகம் 33 வருடங்களுக்கு பிறகு விஷூவல் செய்யப்பட்ட இளையராஜாவின் பாடல்!…

33 வருடங்களுக்கு பிறகு விஷூவல் செய்யப்பட்ட இளையராஜாவின் பாடல்!…

33 வருடங்களுக்கு பிறகு விஷூவல் செய்யப்பட்ட இளையராஜாவின் பாடல்!… post thumbnail image
சென்னை:-கார்த்திக்-ராதா அறிமுகமான படம் ‘அலைகள் ஓய்வதில்லை’. பாரதிராஜா இயக்கிய இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். படத்தில் மொத்தம் 11 பாடல்கள் இடம்பெற்றன. அதில் பஞ்சு அருணாசலம் எழுதிய, ‘புத்தம் புது காலை…’ என்று தொடங்கும் எஸ்.ஜானகி பாடிய பாடல் கேசட்டில் மட்டும் இடம்பெற்றிருந்தது. அதை பாரதிராஜா விஷூவல் பண்ணவில்லை. ஆனபோதும் அந்த பாடலும் மெகா ஹிட்டானது.

ஆனால் அந்த பாடலை இப்போது இளையராஜா இசையில் வெளியாகவிருக்கும் மேகா என்ற படத்தில் இணைத்து விஷூவல் பண்ணியிருக்கிறார்கள். கதைப்படி, ஒரு திருமண விழாவில் சந்தித்துக்கொள்ளும் ஹீரோ-ஹீரோயின் இருவருக்குமிடையே காதல் மலர்வது போன்று உருவாக்கபபட்டுள்ள அந்த காட்சிகளின் பின்னணியில் இந்த புத்தம் புது காலை பாடல் இணைக்கப்பட்டுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி