செய்திகள்,திரையுலகம் திகில் படத்திற்கு இசையமைக்கும் இளையராஜா!…

திகில் படத்திற்கு இசையமைக்கும் இளையராஜா!…

திகில் படத்திற்கு இசையமைக்கும் இளையராஜா!… post thumbnail image
சென்னை:-பொதுவாக இளையராஜா திகில் படங்களுக்கு இசை அமைப்பது மிகவும் குறைவு. இசை மக்களை பயமுறுத்த அல்ல பண்படுத்த என்று அடிக்கடி சொல்வார். நல்ல கதைகள் உள்ள படம் அமையும்போது இசை அமைப்பார். அந்த வரிசையில் இப்போது இளையராஜா அமைத்துள்ள திகில் படம் மேகா.

இந்த படத்திற்கு தொடர்ச்சியாக 12 நாட்கள் பின்னணி இசை அமைத்துள்ளார். அலைகள் ஓய்வதில்லை படதிற்கு இளையராஜா ‘புத்தம் புது காலை பொன்னிற வேளை’ என்ற பாடலை போட்டிருந்தார். அந்த பாடல் இசை தட்டில் வெளிவந்தது, படத்தில் இடம்பெறவில்லை. தற்போது அந்த பாடலை இந்தப் படத்துக்கு பயன்படுத்திக் கொள்ள அனுமதித்திருக்கிறார். அதை பிரமாண்டமான முறையில் படமாக்கவும் செய்திருக்கிறார்கள்.

மங்காத்தா. இதற்குதானே ஆசைப்பட்டாய் படங்களில் நடித்த அஸ்வின் கதையின் நாயகனாக நடித்துள்ளார். பெங்களூரூ மாடல் அங்கனா ராய் நாயகியாக நடித்துள்ளார், சுப்ரமணியம் சிவாவின் உதவியாளர் கார்த்திக் ரியா இயக்கி உள்ளார், ஆர்.பி.குருதேவ் ஒளிப்பதிவு செய்துள்ளார். படம் ஆகஸ்டில் வெளிவருகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி