‘அன்னக்கொடி’ படத்திற்கு பிறகு இயக்குனர் பாரதிராஜா புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளார். இப்படத்திற்கு ‘நேற்றைக்கு மழை பெய்யும்’ என்று தலைப்பு வைத்துள்ளார். இயக்குனர் அகத்தியன் எழுதிய கதையை படமாக இயக்குகிறார் பாரதிராஜா.
இப்படத்தின் கதாநாயகனாக இயக்குனர் சேரன் நடிக்கிறார். கதநாயாகி யார் என்பது இன்னும் முடிவாகவில்லை. தற்போது இப்படத்திற்கான திரைக்கதை அமைக்கும் பணியில் பாரதிராஜா மும்முரமாக களமிறங்கியுள்ளார்.
காதலை மையப்படுத்தி உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பை ஆகஸ்ட் 3-ந் தேதி தொடங்கவுள்ளனர். மற்ற நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. விரைவில் இதுகுறித்து முழுமையான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி